Wednesday, June 18

திருச்சி கல்லணையில் ஆரத்தி திருவிழா

Loading

 

இயற்கையின் அருட்கொடையான தண்ணீருக்கு கங்கா ஆரத்தி போல திருச்சி கல்லணையில் தக்ஷணா பவுண்டேஷன் சார்பில் ஆரத்தி திருவிழா நடைபெற உள்ளது .திருச்சியில் 6.8.17 அன்று மாலை நடிகர்கள் முக்கிய விருந்தினர்கள் அதிகாரிகளோடு பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒன்று திரண்டு நீருக்கு நன்றி சொல்ல இருக்கிறார்கள். இந்த ஆரத்தி திருவிழா குறித்து குருஜி மித்ரேஷிவா பத்திரிகையாளர்களை சந்தித்து  நீரின் அவசியம் பற்றியும் திருச்சியில் நடக்கும் நிகழ்ச்சியின் அவசியத்தையும் தெரிவித்தார். கலந்து கொண்ட அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.