டோக்கியோ தமிழ்ச் சங்கத்தின் “விண்ணைத் தாண்டி”!
"நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு"! என்று கூறினார் மறைந்த மாமனிதர் திரு ஏபிஜே அப்துல் கலாம் . இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கையை ஒரு வரலாற்றாய்ப் பதிப்பதற்கு ஒரு வாய்ப்பு உண்டு சர்வதேச சக்கர நாற்காலி டென்னிஸ் விளையாட்டில் களமிறங்கி, உலகளாவிய அளவில் பல நாடுகளில், போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் பல வென்ற திரு சத்தியமூர்த்தி தான், இன்றைய நம் சாதனையாளர். சிறந்த பண்பாளர் மனிதநேயமிக்க மனிதர் , விளையாட்டு போட்டிகளில் சாதித்த லே போதும் என்று தன்னை நிறுத்திக் கொள்ளாமல் இச்சமுதாயத்திற்கென்று நாம் ஏதாவது பங்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், "ஹய் ஆக்டேவ்", "சென்னையில் திருவையாறு" என்ற இயக்கங்களின் வாயிலாக, முதியோர் காப்பகங்கள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கும் கல்வி, என்று உதவிகள் பல முனைந்துள்ளார். சமுதாயப் பங்களிப்புக்காக விவேகானந்தர் விருது ம...
