
படைதலைவன் _ விமர்சனம்
படைதலைவன் _ விமர்சனம்
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் படம் படை தலைவன்.
பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள சேத்துமடை பகுதியில் கஸ்தூரிராஜா தனது மகன் சண்முக பாண்டியன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.
மணியன் என்ற கம்பீரமான யானை ஒன்றும் இவர்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போலவே வளர்ந்து வருகிறது.
கோடி கணக்கான ரூபாய் சம்பாதிப்பதற்காக யானை மணியனை வன காளிக்கு பலி கொடுக்க திட்டமிடுகிறான் வில்லன்.
இதற்காக பல சதி வேலைகளை செய்து யானையை காட்டுக்குள் கடத்திச் சென்று விடுகிறான் வில்லன்.
யானையைத் தேடிச் செல்லும் சண்முக பாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?
பலி கொடுக்கப்பட இருந்த யானை மணியனை எப்படி அவர்கள் காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் படைத்தலைவன் படத்தின் கதை.
சண்டை காட்சிகளில் அப்பா விஜயகாந்த் போலவே அதிரடி...