“இதயத்திலிருந்து 6 கல்”

0

Loading

 

 

கலைவாணி எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் எம்.வடிவேல்வாண்டையார் தயாரித்திருக்கும் படம் “இதயத்திலிருந்து 6 கல்”
இப்படத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் உதயராஜ் கதைநாயகனவும் ஹாசிகாதத் கதைநாயகியாகவும் நடிக்க நிழல்கள்ரவி, யுவராணி, அஜய்ரத்னம், பாண்டு, அல்வா வாசு, ரிந்துரவி, கம்பம்மீனா ஆகியோர் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் கௌஷல்யன் இயக்கியுள்ளார். ஆதி இசையமைக்க ஜி.சிவராமன் ஒளிப்பதிவு செய்ய எஸ்.என்.பாஸில் படத்தொகுப்பு செய்துள்ளார்.
காதல் வாழ்க்கை என்ற விஷயத்தில் பிள்ளைகளும் பெற்றோரும் எப்படி இருக்கவேண்டும் என்ற கோணத்தில் புரட்சிகரமான புதிய கிளைமாக்ஸ் வைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் கௌஷல்யன். கதைநாயகன் உதயராஜ் நடிப்பிற்காக படபிடிப்பின் முதல்நாள்வரை எவ்வித சிறிய பயிற்சியையும் எடுத்திருக்காத சூழ்நிலையிலும் அவரை கதைக்கேற்றவாறு சரியாக பயன்படுத்தி இருக்கிறார். படத்தின் கதைநாயகன் உதயராஜின் நடிப்பு ஆர்வத்தை பார்த்து உடன் நடித்த நடிகர் நிழல்கள்ரவி டிப்ஸ் கொடுத்து மிகவும் பாராட்டியிருக்கிறார்.
இத்திரைப்படத்தின் வசன காட்சிகள் கும்பகோணம், மற்றும் பட்டீஸ்வரத்திலும் பாடல் காட்சிகள் இயற்கை எழில்நிறைந்த இடங்களிலும் ஒரே ஷெட்யூலில் நடைபெற்றுமுடிந்தது பெருமைக்குரிய விஷயமாகும்.
“இதயத்திலிருந்து 6 கல்” திரைப்படத்தில் யுகபாரதி எழுதியிருக்கும் அம்மாடி நீ சிரித்தாலே…… என்ற பாடல் கும்கியின் அய்யய்யய்யோ ஆனந்தமே வரிசையிலும் குட்டிகுரா போட்டவளே…… பாடல் மன்மதராசா மற்றும் ஊதாகலர் ரிப்பன் சாதனை வரிசையிலும் சரி ஹிட் ஆகும் என்று பாடல்பதிவின்போதும் படபிடிப்பின்போதும் தெரிந்துள்ளது. பாடல்கள் வெகுவிரைவில் வெளியாக உள்ளது.
Share.

Comments are closed.