சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் சார்லி

0

Loading

எந்த ஒரு படத்திற்கும் உணர்வுகள் தான் ஜீவன்  தரும். கதாபாத்திரங்களை உணர்வுப்பூரமாக அமைத்தால் அது மக்களிடையே நிச்சயம் போய் சேரும். இது போன்ற கதாபாத்திரத்தை தான் நடிகர் சார்லி , சிவகார்த்திகேயன் -நயன்தாரா நடிப்பில் , மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் செய்துள்ளார். எந்த ஒரு கதாபாத்திரத்திலும் அசத்தும் சார்லி அவர்கள் இப்படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
” வெகு சிலரிடம் மட்டுமே நாம் மனதளவில் குறுகிய காலத்திலேயே நெருக்கமாகிவிடுவோம். அது போன்ற ஒரு அருமையான நபர் தான் சிவகார்த்திகேயன்.இப்படத்தில் , திரைக்கு பின்னாலும் எங்கள் நட்பு தொடர்ந்து மேலும்  உறுதியானது. தனது மிக  எளிமையான, நல்ல குணத்தால் பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுகிறார். அவரது இந்த எளிமையும் , எங்களது நட்பும் எங்கள் இந்த மகன் -தந்தை கதாபாத்திரங்களை மேலும் சிறப்பாகியுள்ளது.இப்படத்தில்  எங்களது கூட்டணி ஜனரஞ்சகமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருக்கும். மகனின் முக்கியமான முடிவுகளுக்கு ஆதவளித்து துணை நிற்கும் ஒரு அருமையான தந்தை கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். இயக்குனர் மோகன் ராஜா சார் , ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் மற்றும் கலை இயக்குனர் முத்துராஜ் சார் ஆகியோர் வெறும் தொழில்நுட்ப கலைஞர்கள் கிடையாது. அவர்களை மிகப்பெரிய தொழில் வித்தகர்கள்’ என்று தான் கூறவேண்டும் ” என்றார் நடிகர் சார்லி.
Share.

Comments are closed.