பத்மவிபூஷண் விருதுக்கு இளையராஜாவால் கௌரவம்

0

Loading

 பாரத ரத்னாவுக்கு அடுத்த பெரிய விருது பத்மவிபூஷண்.
    68 ஆண்டுகளில் 100 பேர் இந்த விருது வாங்கியிருந்தால் அதிகம்.
       ராகதேவன் இளையராஜாவுக்கு
அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இல்லை.
      அந்த விருதுக்கு ராஜாவால்
கௌரவம் கிடைத்துள்ளது.
      பஞ்சு அருணாசலம் அவர்களால்
‘அன்னக்கிளி’- படத்தின் மூலம்
தமிழ் திரையுலகுக்கு கிடைத்த புதையல் அவர்.
     அப்படத்தின் கதாநாயகனாக  நான் நடித்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
       50-க்கும் மேற்பட்ட எனது படங்களுக்கு இசையமைத்து
படங்களின் வெற்றிக்கு ஆணிவேராக
இருந்திருக்கிறார் .
      எனது 100-வது படம் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி ‘-‘ சிந்துபைரவி ‘-
படங்களின் வெற்றியில் பெரும் பங்கு அவருடையது.
      தன் வாழ்நாளை இசைக்காகவே
அர்ப்பணித்த அபூர்வ கலைஞர்.
   அவரால் கலையுலகும் தமிழகமும்
இந்த விருது மூலம் கௌரவிக்கப் பட்டிருக்கிறது.
   எத்தனை விருதுகள் கொடுத்தாலும்
அவர் இசையுலகில் சாதித்ததற்கு
அவை ஈடாக முடியாது.
வாழ்க இசைஞானி .
ஓங்குக அவர் புகழ் !!
⁃சிவகுமார்
⁃திரைப்படக்கலைஞர்

Share.

Comments are closed.