திறமையான இளம் கலைஞர்களை கண்டறிந்து, அவர்களின் படைப்புக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பணியை செம்மையாக செய்து கொண்டிருக்கிறது, இந்தியாவில் முன்னணி குறும்பட தயாரிப்பு நிறுவனமாக விளங்கி கொண்டிருக்கும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’ . இவர்களின் அடுத்த படைப்பு இயக்குநர் ஷியாம் சுந்தர் இயக்கி இருக்கும் ‘பங்காரு’ .
மாமன்னர்களும், அரசர்களும் வாழ்ந்த இடங்களில் நிச்சயமாக ஏகப்பட்ட தங்கம் மறைக்க பட்டிருக்கும். அப்படிபட்ட ஒரு இடம் தான், பங்காரு. யாராலும் கண்டுபிடிக்க முடியாத விதத்தில், பல்லாயிரம் கிலோ தங்கம் மறைக்கப்பட்டிருக்கிறது. அதை கண்டுபிடிக்க பல துப்புக்களும், வழிகளும் இருந்தாலும், அந்த தங்கத்தை கண்டுபிடிக்க முடிந்ததா என்பது தான் இந்த 35 நிமிடம் ஓடக்கூடிய ‘பங்காரு’ குறும்படத்தின் கதை.