போதை ஏறி புத்தி மாறி …
எந்தவொரு மனிதனின் வாழ்விலும் 'if & but' போன்ற வார்த்தைகள் முக்கியத்துவம் வகிப்பது போல, போதை மயக்கமும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அது பல மனிதர்களின் நம்பிக்கைகளையும் கற்பனைகளையும் திசை திருப்புகிறது. இந்த மாதிரி விஷயங்களை தீவிரமாக பேசும் ஒரு படம் தான் 'போதை ஏறி புத்தி மாறி'. ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கே.ஆர். சந்துரு இயக்குகிறார். பிரபலமான ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கே பி இசையமைக்கிறார். சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குனராகவும் பணிபுரிகிறார்கள். படத்தின் தலைப்பே மொத்த படத்தை பற்றியும் சொல்லும். சீட்டின் நுனிக்கே வர வைக்கும் பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்ட ஒரு திரில்லர் படமாக இது இருக்கும். குறும்படங்களில் நாயகனாக கலக்கிய தீரஜ் இந்த படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமாகிறார்.
&nbs...
