Friday, May 1

Tag: director naveen

கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’!

கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’!

News
'அக்னி சிறகுகள்' படப்பிடிப்பு முடியும்போது இப்படக்குழுவினரிடமிருந்து  சுற்றுலா தொடர்பாக ஏராளமான சுவையான மற்றும் பயனுள்ள தகவல்களைப் பெறலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு கல்கத்தாவில் தொடங்கி கஜகஸ்தான்வரை படப்பிடிப்பை நடத்தியிருக்கின்றனர். 'அக்னி சிறகுகள்' படக்குழு கல்கத்தாவின் நெரிசல் மிகுந்த வீதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு, இப்போது ரஷ்யாவிலுள்ள கஜகஸ்தானில் இரண்டாம் கட்டப் படிப்பிடிப்பையும் வெற்றிகரமாக முடித்திருக்கின்றனர். அருண் விஜய், விஜய் ஆன்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் போன்ற நட்சத்திரங்களுடன் படத்தின் பெரும் பகுதியை இங்கே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் நவீன். பூலோக சொர்கம் என்று சொல்லத் தக்க வகையில் அமைந்தருக்கும் கஜகஸ்தானில் உள்ள அல்மதி நகரத்தில் படப்பிடப்பு நடந்திருக்கிறது. இது குறித்து விவரித்த அக்னி சிறகுகள் படத்தின் இயக்குநர் நவீன்.. "அல்மதி நகரி...
மூடர்கூடம் நவீன் மீது தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமன் குற்றச்சாட்டு!

மூடர்கூடம் நவீன் மீது தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமன் குற்றச்சாட்டு!

News
தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமன் வெளியிட்டிருக்கும் ஓர் அறிவிக்கையில் கூறியிருப்பதாவது... எனது Flash Films  என்னும் பட தயாரிப்பு நிறுவனம் மூலம் எனது மருமகன் விஷாகனை வைத்து படம் எடுக்க திட்டமிட்டேன் அப்போது “ மூடர்கூடம் “ நவீன் என்பவர் எனது உறவினர் ராகுலன் மூலமாக என்னை அணுகினார். படம் இயக்கி தருவதாக சொல்லி கதையின் பவுண்ட் ஸ்கிர்ப்ட் தருகிறேன் என்று என்னிடம் 45 லட்சம் செக்காகவும், 5 லட்சம் பணமாகவும் பெற்றுக்கொண்டார். இதற்கு முறையாக 23.08.2016 அன்று ஒப்பந்தம்   போட்டு அதன் படி நடந்து கொள்வதாக கூறினார். ஆனால் ஒப்பந்தத்தின் படி எந்த வகையிலும் நடக்காமல் அமெரிக்கா சென்றுவிட்டார். சுமார் 10 மதங்கள் கடந்தும் பவுண்ட் ஸ்கிரிப்ட் எழுதி வரவில்லை. ஆனால்  படத்தை முடித்து கொடுப்பதாக கூறினார். அவரது அனைத்து செலவுகளும் எனது தயாரிப்பு  அலுவலகம்  மூலமாகவே செய்யப்பட்டது. நான் இத...
’மூடர் கூடம்’  நவீன் வெளியிட்டிருக்கும் அறிக்கை!

’மூடர் கூடம்’ நவீன் வெளியிட்டிருக்கும் அறிக்கை!

News
’மூடர் கூடம்’ திரைப்படத்திற்கு பிறகு நான் தயாரித்து இயக்கி நடித்துள்ள ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ திரைப்படம் வெளியிட தயாராக இருக்கும் நிலையில், Flash Films நிறுவனத்தின் சுவர்ணா சேதுராமன் என்பவர் எனது படத்தின் ரிலீசுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளார். அலாவுதீனின் அற்புத கேமரா படத்திற்காக அவர் 44.5 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் நான் அதை திருப்பி தரவில்லை என்றும் பொய்வழக்கு தொடுத்துள்ளார். உண்மையில் Flash Films நிறுவனத்திற்கும் இந்த திரைப்படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. 2016ல் Flash Films சார்பில் திரு.ராகுலன், என்னுடைய மேனேஜர் திரு வாசுதேவன் ராமமூர்த்தியை அழைத்து நவீன் எங்களுக்கு ஒரு படம் செய்து தருவாரா என்று கேட்டார். அபெக்ஸ் ஃபார்மசிட்டிகள்ஸ் நிறுவணத்தின் வாரீசான விசாகனை ஹீரோவாக வைத்து படம் எடுக்க வேண்டும். விசாகன் அமேரிக்காவில் நடிப்பு பயிற்சி பெற்று வந்துள்ளார் என்று கூரினார். ...