‘கன்னக் குழியழகே’ – அருண்ராஜா காமராஜின் ஏ.ஆர்.கே. நிறுவனத்தின் முதல் சுயாதீன தனிப்பாடல்!
அருண்ராஜா காமராஜ் தனது இணையற்ற ஆற்றல் காரணமாக திரையுலகிலும் இசைத் துறையிலும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்து வருகிறார். பாடலாசிரியராக இருந்து 'கனா' என்ற படத்தை இயக்கியதன் வாயிலாக, புதிய உயரம் தொட்டு சிறப்பான இடத்தை அடைந்திருக்கிறார். அதே சமயம் ஏ.ஆர்.கே. என்ற பெயரில் தன் சொந்த நிறுவனத்தைத் துவங்கி, பிலீவ் ஆர்டிஸ்ட் சர்வீசஸ் அண்ட் டெவலப்மெண்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து, இசை ஆல்பங்களையும் தனிப்பாடல்களையும் தொடர்ந்து வெளியிடும் திட்டத்துடன் புதியதொரு பயணத்தையும் தொடங்கியிருக்கிறார். 'கன்னக் குழியழகே' என்ற தனிப்பாடல், இந்த நிறுவனம் சார்பாக முதல் முறையாக வெளியிடப்பட்டிருக்கிறது. கணேசன் சேகர் இசையமைப்பில் நாட்டுப்புற மெல்லிசைப் பாடலாக உருவாக்கப்பட்டிருக்கும் இதன் டீசர் ஓரிரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டபோதே, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. விஜய் ஜேசுதாஸின் தேனிசைக் குர...
