மூன்று மொழிகளில் தயாராகும் ‘மாஃபியா’!
மூன்று மொழிகளில் தயாராகும் ‘மாஃபியா’!
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்களை பெங்களூரில் விநியோகம் செய்து வருபவர் குமார்.
இவர் முதன் முறையாக தமிழ் படத்தை தயாரிக்கிறார்.
படத்தின் பெயர் ‘மாஃபியா’.
இந்தப் படத்தை எச். லோகித் இயக்குகிறார்.
இதில் நாயகனாக பிரஜ்வால் தேவ்ராஜ் நடிக்கிறார். இவர் கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்தவர்.
படம் குறித்து இயக்குநர் லோகித் கூறியதாவது : ‘‘சினிமாவுக்கு வந்த பிறகு நான் இயக்கும் மூன்றாவது படம் இது. இதற்கு முன் ‘மம்மி’ மற்றும் பிரியங்கா உபேந்திரா நடித்த ‘தேவகி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளேன். கன்னடத்தில் வெற்றி பெற்ற அந்தப் படங்கள் பெரிய வெற்றியடைந்ததோடு தமிழிலும் டப் செய்யப்பட்டது.
'மம்மி’ படத்தின் திரையரங்கு உரிமையை தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ் வாங்கியிருந்தார்.
என்னுடைய மூன்றாவது படத்தை நேரட...



