Wednesday, September 2

Tag: PoosandiVaran

பூ சாண்டி வரான் – விமர்சனம்

பூ சாண்டி வரான் – விமர்சனம்

News
பூ சாண்டி வரான் - விமர்சனம் காமெடி செய்து கலகலப்பூட்டிய பேயில் தொடங்கி, கலங்க வைத்து திகிலூட்டிய பல பேய் படங்களைப் பார்த்த ரசிகர்களுக்கு அமானுஷ்ய சக்திகளை மையப்படுத்தி வந்திருக்கும் அசத்தலான படம்தான் பூ சாண்டி. பூ சாண்டி என்ற சொல் இப்போதும் தமிழகத்தில் புழக்கத்தில் இருப்பதை நாம் பல இடங்களில் காணலாம். சொல் பேச்சு கேட்காத குழந்தைகளை பூச்சாண்டியிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று சொல்லி பயமுறுத்தி பணிய வைக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. தமிழகத்தை களப்பிரர்கள் ஆண்ட காலத்தை இருண்ட காலம் என்று வரலாற்றியலாளர்கள் குறிப்பிடுவார்கள். சைவர்கள் நெற்றியில் திருநீறு பூசிக்கொண்ட காரணத்தாலேயே கடுமையாக தண்டனை விதிக்கப்பட்ட காலம் அது. சிவனடியார்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடல் முழுவதும் திருநீறு பூசி தெருவில் செல்வார்களாம். அப்படி திருநீறு பூசிக்கொண்ட ஆண்டிகள் சிவனாண்டிகள். பூச்சாண்...