ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் படம் ‘விழித்தெழு’
விழித்தெழு திரைப்படத்தின் படக் குழுவினர் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் இப்படத்தை ஆதவன் சினி கிரியேஷன் சார்பில் தயாரித்திருக்கும் தயாரிப்பாளரும் பத்திரிகையாளரும் சிவகங்கை நகர மன்றத் தலைவருமான சி.எம்.துரை ஆனந்த், 'விழித்தெழு' படத்தின் இயக்குநர் தமிழ்ச்செல்வன், படத்தின் கதாநாயகன் அசோக், நடிகர் 'பருத்திவீரன்' சரவணன், நடிகை ஆதியா,நடிகர்கள் ரஞ்சன், சரோஜ்குமார், காந்தராஜ், சேரன் ராஜ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் தமிழ்ச்செல்வன் பேசும்போது,
" இந்த ஆன்லைன் மோசடி பற்றி மக்களுக்குப் புரியும் படியாகத் தெளிவாகக் கூறியிருக்கிறோம்.சொல்ல வந்த விஷயத்தைச் சரியாகச் சொல்லியிருக்கிறோம்.
படம் பார்த்து விட்டு வெளியில் வரும்போது என் வாழ்க்கையில் இப்படி நடந்தது உன் வாழ்க்கையில் இப்படி நடந்தது என்று ஒவ்வொருவரும் பேசிக் கொள...





