தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் செய்த இரத்த தானம்!

0

 470 total views,  1 views today

நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா , செயலாளர் B .ராஜா ஆகியோர் தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று சென்னையில் உள்ள ACS மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது .

இந்த முகாமில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றங்கள் , கேரளா , கர்நாடக , ஆந்திரா , மும்பை போன்ற பகுதிகளில் இருந்து ரசிகர்கள்  கலந்துகொண்டனர் .
 
தமிழ்நாட்டில் ஒரே இடத்தில இவ்வளவு ரசிகர்கள் இணைந்து இரத்ததானம் செய்வது இதுவே முதல்முறை .

இந்த இரத்ததான முகாமை , தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு , T .G தியாகராஜன் , தனுஷின் பெற்றோர் கஸ்தூரி ராஜா & விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா , S .வினோத் குமார் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவங்கி வைத்தனர் .

இந்த விழாவில் பேசிய கலைப்புலி S தாணு ” 1500  க்கும் மேற்பட்ட  ரசிகர்கள் இணைத்து ரத்ததானம் செய்வதை இப்போதுதான் முதல்முறை பார்க்கிறேன் என மகிழ்ச்சியுடன் பேசினார் .

பிறகு விழாவில் நடிகர் தனுஷ் , ஐஸ்வர்யா தனுஷ் , மற்றும் கென் கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் .

தனுஷ் பேசியவை :

இரத்த தானம் செய்த உங்களை  நினைத்து மிகவும் பெருமை படுகிறேன். கலந்துகொண்ட அனைவருக்கும் மிகவும் நன்றி . அனைவரிடமும் அன்பை மட்டும் செலுத்துவோம் என அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும்  , ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார் .

Share.

Comments are closed.