வட தமிழகத்தின் வாழ்வியலைச் சொல்லும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’

0

 481 total views,  2 views today

இயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான ‘ இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.

தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார்.
கிஷோர் ஒளிப்பதிவு , கலை இயக்குனராக
த.இராமலிங்கம் , எடிட்டர் செல்வா, பாடல்கள் , உமாதேவி மற்றும் தனிக்கொடி எழுதியிருக்கிறார்கள். விரைவில் பாடல்கள் வெளியீடு நடைபெற இருக்கிறது.

நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திற்க்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது , இரண்டாவது தாயாரிப்பான குண்டு திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாக இருக்கிறது. ஜனரஞ்சகமான கதையமைப்பில் , மக்கள் ரசிக்கும்விதத்தில் உருவாகியிருக்கும் குண்டு திரைப்படத்தில் வட தமிழகத்தின் வாழ்வியலோடு உலக அரசியலோடு இணைத்து படம் பார்ப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும் வகையில் படம் அமைந்திருப்பதாக இயக்குனர் கூறுகிறார் இயக்குனர் அதியன் ஆதிரை.

 

Share.

Comments are closed.