“தமிழ் சினிமாவின் பெரும் நம்பிக்கை துருவ்”_இயக்குனர் மாரி செல்வராஜ்!
பதற்றமான தென் தமிழகத்து இளைஞர்களில் தப்பிப்பிழைத்த இளைஞர்களின் கதைதான் "பைசன்"!-- இயக்குனர் மாரி செல்வராஜ்*
நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அக் - 17 அன்று வெளியாகவிருக்கும் படம் பைசன்.
அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப்படம் உருவாக்கம் குறித்து இயக்குனர் மாரிசெல்வராஜ் கூறியது.
"பைசன்" என் கரியரில் முக்கியமான படம் .
மிகவும் கனமான, சிக்கலான ஒரு கதையை சொல்லியிருக்கிறேன்.
இந்த கதையை சொல்ல முயற்சிக்கும் பொழுது ஒரு பக்குவத்தை இந்த கதையே எனக்கு கொடுத்தது. இந்த கதையை மக்கள் பார்ப்பதன் மூலமாக ஒன்று நடக்கும் என்று நம்புகிறேன்.
இதில் கபடி வீரர் மணத்தி கணேசன் கதையும் இருக்கிறது, என் கதையும் இருக்கிறது , பதற்றமான தென் தமிழகத்து இளைஞர்கள் பலபேரின் கதையும் இருக்கிறது.
இந்தபடத்திற்காக தன்னை என்னிடம் ஒப்படைத்த துருவ்விக்ரம், தயாரித்த பா.இரஞ்சித் அண்ணன் ...




