திவ்யா _ விமர்சனம்
திவ்யா விமர்சனம்
ஆணவக் கொலை குறித்து வந்திருக்கும் மற்றொரு திரைப்படம் திவ்யா.
பட்டியலினத்தை சேர்ந்த நாயகன் ஆர் ஜே பி., தன் தாத்தா மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார்.
கல்லூரியில் படித்து வரும் இவர், பகுதி நேர வேலையாக பறை அடிக்கும் தொழிலையும் செய்து வருகிறார்.
நாயகன் படிக்கும் அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டுக்கு வந்து சேர்ந்த நாயகி கேத்தி, நாயகன் அண்ட் கோவால் 'ரேக்' செய்யப்பட்டாலும், பின்னர் நாயகனின் குடும்பப் பின்னணி அறிந்து அவனிடம் ஈடுபாடு கொள்கிறாள்.
பேச்சு வாக்கில் "நீ சிரிப்பது என் அம்மா சிரிப்பது போல் இருக்கிறது..." என்று ஆர் ஜே பி சொல்ல, நெஞ்சம் நெகிழ்கிறார் நாயகி.
தன் காதலன் ஆர் ஜே பி படித்து நல்ல வேலையில் சேர்ந்தால் மட்டுமே அவரது குடும்பம் முன்னேறும் என்பதை நன்கு உணர்ந்த நாயகி அவ்வப்போது அந்த பொறுப்புகளை அவனுக்கு நினைவூட்டியும் வருகிறார்.
இந்த சூழலில் நாயகியின...
