மாண்புமிகு பறை _ விமர்சனம்
மாண்புமிகு பறை_ விமர்சனம்
நண்பர்களான லியோ சிவகுமார் மற்றும் ஆர்யன் இருவரும் ஆதி பறை இசைக் குழு என்ற பெயரில் பறை இசைக் குழு ஒன்றை நடத்தி வருகின்றனர்.
பறை வாசிப்பதை வெறும் தொழிலாக மட்டும் செய்யாமல் ஆத்மார்ந்தமாக அதைச் செய்யும் இவர்கள், ஆர்வம் உள்ளவர்களுக்கும் கற்றுக் கொடுக்கின்றனர்.
எவ்வளவு பணம் கிடைத்தாலும் இறந்தவர் வீட்டிலும்,ஈமக் கிரியை நடக்கும்போதும் பறை இசை வாசிக்கச் செல்லக் கூடாது என்பதை கொள்கையாக வைத்திருக்கும் இவர்கள் மீது ஆதிக்க சக்திகள் கடும் கோபத்தில் இருக்கின்றன.
பக்கத்து ஊரில் ஒரு விழாவுக்கு வாசிக்கச் செல்லும்போது, குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முற்பட்டவர்களை தட்டிக் கேட்டதால், ஆர்யன் கொல்லப்படுகிறார்.
ஆதிக்க ஜாதியை சேர்ந்த காயத்ரி ரெமோ காதலித்து திருமணம் செய்து கொண்ட லியோ சிவகுமாரும் ஒரு கட்டத்தில் கொலை செய்யப்படுகிறார்.
பறை இசைக் கல...
