450 + திரையரங்குகளில் வெளியாகும் ‘திரெளபதி’!
தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி வழங்கும் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் 'திரெளபதி 2'!
இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான பிரம்மாண்ட கதைகளை கொடுக்க தயாரிப்பாளர்களின் ஆதரவு மிக அவசியம். அப்படியான திரைப்படங்கள் இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கிறது என்றால் அதற்கு சோலா சக்ரவர்த்தி போன்ற தயாரிப்பாளர்களே முக்கிய காரணம். இன்று (ஜனவரி 23, 2026) உலகம் முழுவதும் 450 + திரையரங்குகளில் வெளியாகும் 'திரெளபதி' திரைப்படத்தை தயாரித்திருப்பதன் மூலம் திரைத்துறையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி.
படம் குறித்து தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி பகிர்ந்து கொண்டதாவது, "இயக்குநர் மோகன் ஜி 'திரெளபதி 2' கதையை பிரம்மாண்டமாக திரையில் கொண்டு வந்திருக்கிறார். அவருடைய டைரக்ஷன் ஸ்டைல், சரியான திட்டமிடல், அர்ப்பணிப்பு இவை எல்லாம்தான் பல சவால்களை தாண்டி படத்தை திட்ட...






