படையாண்ட மாவீரா _ விமர்சனம்
படையாண்ட மாவீரா _ விமர்சனம்
மாவீரன் என்ற பட்டத்துடன் வாழ்ந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் படையாண்ட மாவீரா.
ஆதிக்க சக்திகளுக்கு எதிராக களத்தில் நின்று மக்களுக்காக போராடிய குரு பாத்திரத்தில் இயக்குனர் வ.கவுதமன் தோன்றி நடித்திருக்கிறார்.
காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தீனா ஓர் ஏழைப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை அறியும் குரு, அதற்கு நியாயம் கேட்கச் சென்றபோது போலீஸ்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் அவர்களை அடித்து துவம்சம் செய்து போலீஸ் நிலையத்தையே சூறையாடுகிறார்.
அதே சமயம் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏழை மக்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்திலும் இறங்குகிறார்.
முதலாளிகளும் போலீஸ் அதிகாரிகளும் சேர்ந்து குருவை தீர்த்து கட்டுவதற்கு முயற்சி செய்கின்றனர். இதன் முடிவு என்ன என்பதுதான் படையாண்ட மாவீரன் படத்தி...
