Friday, May 1

Tag: surya

சாய் பல்லவியின் கார்கி படத்தை வெளியிடும் சூர்யா – ஜோதிகா!

சாய் பல்லவியின் கார்கி படத்தை வெளியிடும் சூர்யா – ஜோதிகா!

News
தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் சாய்பல்லவி. நடிப்பு, நடனம், என ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி, அதையடுத்து வரிசையாக முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது சாய்பல்லவி நடிப்பில் ’கார்கி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் தலைப்பு போஸ்டரை வெளியிட்டனர். இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில் சாய்பல்லவி கார்கி படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று பகிர்ந்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். இந்த காத்திருப்புக்கு பதிலளிக்கும் விதமாக பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து கார்கி பட...
சூர்யாவின் படத்தில் அறிமுகமாகிறார் அருண்விஜய் மகன்  மாஸ்டர் ஆர்னவ் விஜய்!

சூர்யாவின் படத்தில் அறிமுகமாகிறார் அருண்விஜய் மகன் மாஸ்டர் ஆர்னவ் விஜய்!

News
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜயின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்து தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க, ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், மற்றும் RB Films S.R.ரமேஷ் பாபு, இணை தயாரிப்பு செய்கின்றனர். இப்படத்தை இயக்குபவர் சரோவ் சண்முகம். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார். மேகா படத்தொகுப்பு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பை அமரன் செய்கிறார் மற்றும் உடை வடிவமைப்பை வினோதினி பாண்டியன் மேற்கொள்கிறார். படம் குறித்து சரோவ் சண்முகம் கூறியதாவது... குழந்தைகளை மையப்படுத்திய குடும்ப படங்கள் ஹாலிவுட்டை ஒப்பிடும்போது நம் தமிழ் சினிமாவில் மிகவும் அரிதானவை. நடிகர் சூர்யா அவர்களின் ...
சூர்யா ரசிகர்களால் அதிர்ச்சியடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்!

சூர்யா ரசிகர்களால் அதிர்ச்சியடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்!

News
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'காப்பான்' திரைப்படம் நேற்று வெளியானது. பல்வேறு திரையரங்குகளில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டம் புவனகிரியில் நேற்று திரைப்படத்திற்குச் சென்ற கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேண்டு வாத்தியம் முழங்க ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை புவனகிரி காவல் ஆய்வாளர் அம்பேத்கர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, "முன் அனுமதி வாங்காமல் இது போன்று ஊர்வலம் செல்லக் கூடாது, திரையரங்கில் பேனர் வைக்கக் கூடாது என்று அறிவுரை கூறியதோடு, 'இனிமேல் அப்படிச் செய்ய மாட்டோம்' எனக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்' என்று கூறியிருக்கிறார். கடிதம் எழுதிய 6 பேரும் தமிழைத் தப்பும் தவறுமாக எழுதிக் கொடுத்துள்ளனர். அதில் ஒரு மாணவன் 'ஆய்வாளர்' என்பதை 'ஆவ்யாளர்'னு எழுதிருக்கான். "மனச திடப்படுத்திக்கிட்டுத்தான் அதைப் படிச்சேன். படி...
சூர்யா தயாரிப்பில்  ஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’!

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’!

News
தரமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில்  இயக்குநர் மற்றும் நடிகர்களான பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன்  ஆகிய மூவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். பிரதாப் போத்தனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். "பொன்மகள் வந்தாள்" என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எழுதி இயக்குபவர் ஜே ஜே ப்ரட்ரிக்,  இவருக்கு இது முதல்படம். எல்லோராலும் ரசித்துக் கொண்டாடக் கூடிய கதைகளில் ஜோதிகா தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால் இப்படத்தின் கதையையும் மிகச் சிறப்பாக இயக்குநர் ஜே. ஜே.ப்ரட்ரிக் உருவாக்கி இருக்கிறாராம். தன் கேமராக் கண்கள் மூலம் ரசிகர்களின் கண்களுக்கு  விருந்தளிக்கும் ராம்ஜி இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இன்று தமிழ்நாட்டு ரசிகர்களி...
சிவகுமார் கல்வி அறக்கட்டளை 40 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 40 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

News
 நடிகர்  சிவகுமார் அவர்கள், தனது அறக்கட்டளை மூலம் கடந்த 40 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த  மற்றும்  விளையாட்டு, கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கபடுத்த தமது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார்  திரு. சிவகுமார். கடந்த 40 ஆண்டுகளாக தகுதியான மாணவர், மாணவிகளை அடையாளம் கண்டு தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். இந்த ஆண்டுகான,  ’சிவகுமார் கல்வி அறக்கட்டளையின்’ 40-ஆம் ஆண்டு நிகழ்வு, சென்னை வடபழனி பிரசாத் லேப்-ல் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 20 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- விகிதம் மொத்தம் ரூ. 2,00,000/- (ரூபாய் இரண்டு லட்சம்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும் ஏழை மாணவர...
காமெடி படத்தில் இணையும் ஜோதிகா- ரேவதி

காமெடி படத்தில் இணையும் ஜோதிகா- ரேவதி

News
ஜோதிகா நடிப்பில், 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்திற்கான பூஜை இன்று சென்னையிள் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார்.   இதற்கான விழாவில் சூர்யா, ஜோதிகா, ரேவதி, நடிகர்கள் ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், இயக்குநர் பிரம்மா, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ் ஆர்  பிரபு ,படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன், படத்தின் இயக்குநர் கல்யாண் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.   36 வயதினிலே, மகளிர் மட்டும்,நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி ஆகியப் படங்களைத் தொடர்ந்து ஜோதிகா, ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் தயாராகவிருக்கும் காமெடி படத்தில் நடிக்கிறார்.   கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப...
நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் !!!!

நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் !!!!

News
வெள்ளித்திரையில் அர்த்தமுள்ள திரைப்படங்கள் உருவாக ஊக்கம் தருவதுடன், அவற்றை தயாரித்து வெளியிடும் தனது நீண்டநாள் கனவை தற்போது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் நனவாக்கி வருகிறார் சூர்யா. 36 வயதினிலே, பசங்க-2, 24, மகளிர்மட்டும் ஆகிய படங்களை தொடர்ந்து, சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட கடைக்குட்டி சிங்கம் படம் வரை சமூக நோக்கிலான படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனம்.   இந்த நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை 'உறியடி' பட இயக்குனர் விஜய்குமார் இயக்கவுள்ளார். உறியடி படம் மூலம் திரையுலகையும் ரசிகர்களையும் கவனிக்க வைத்த இவர், தற்போது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்திருப்பது படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.   மேலும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளரான ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியனுடன், தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் சார்பில் மற்றுமொரு...