Saturday, June 14

Tag: actor surya

ரெட்ரோ ‘நாயகனுக்கு வைர மோதிரம் பரிசளிப்பு!

ரெட்ரோ ‘நாயகனுக்கு வைர மோதிரம் பரிசளிப்பு!

News
சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்தர் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்தி வேலன்! 2 டி என்டர்டெய்ன்மென்ட் - ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'ரெட்ரோ' திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, நூறு கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்திருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையிலும் , படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிப்பதற்காக படக் குழுவினர் பிரத்யேக நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திரையுலகினரும், படக் குழுவினரும், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 'ரெட்ரோ' படத்தை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் விநியோகம் செய்த சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளரான ...

பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் செய்த நடிகர் சூர்யா!

News
பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் செய்த நடிகர் சூர்யா! ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக, நடிகர் சூர்யா தானும் இரத்த தானம் செய்துள்ளார். நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி மன்றம் சார்பில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், நேற்றைய தினம் 400 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர். இன்னும் பல மாவட்டங்களில் ரசிகர் மன்றம் சார்பில் இரத்த தானம் செய்யவும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் சூர்யாவின் பிறந்த நாள் மட்டுமின்றி, எப்போது எங்கு தேவைப்பட்டாலும், இரத்த தானம் அளிக்கும் ஒரு அமைப்பையும் ரசிகர்கள் மேற்கொண்டுள்ளனர். ரசிகர்களின் இந்த சேவையை பாராட்டிய நடிகர் சூர்யா, வீடியோ கால் மூலமாக ரசிகர்களை வெகுவாக பாராட்டினார். கடந்த ஆண்டு 2...
‘ஆடுஜீவிதம்’ படத்தைப் பாராட்டிய நடிகர் சூர்யா !

‘ஆடுஜீவிதம்’ படத்தைப் பாராட்டிய நடிகர் சூர்யா !

News
நடிகர் சூர்யா ‘ஆடுஜீவிதம்’ படத்திற்குப் பாராட்டு: 14 ஆண்டுகால பொறுமை மற்றும் விடாமுயற்சியுடன் உருவாகி இருக்கும் பிருத்விராஜ் சுகுமாரனின் ’தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’! இந்திய சினிமாவின் பெருமை என ரசிகர்களால் புகழப்படும் 'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' திரைப்படம் மார்ச் 28, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில், நடிகர் சூர்யா தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒட்டுமொத்த படக்குழுவினரின் இடைவிடாத கடின உழைப்பைப் பாராட்டியுள்ளார். அவர் தன்னுடையப் பதிவில், ‘உயிர்பிழைக்கும் போராட்டத்தின் கதையைச் சொல்ல 14 ஆண்டுகால உழைப்பு. இதை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு படமாக சொல்வதற்கான வாய்ப்பு வாழ்க்கையில் ஒருமுறை தான் அமையும். இயக்குநர் பிளெஸ்ஸி, பிருத்விராஜ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்றார். சில சாதாரண நபர்களுக்கு சமாளிக்க முடியாத சவாலை ...
‘கங்குவா’ படத்தின்  இரண்டாவது பார்வை!

‘கங்குவா’ படத்தின் இரண்டாவது பார்வை!

News
ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா, யுவி கிரியேஷன்ஸ் வம்சி-பிரமோத் உடன் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும், நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்தின் வெறித்தனமான இரண்டாவது பார்வை இப்போது வெளியாகியுள்ளது! நடிகர் சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும், பிரம்மாண்டமான படமான 'கங்குவா'வின் புரோமோ டீசர் சூர்யாவின் பிறந்தநாளன்று படக்குழு வெளியிட்டது. ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா கடந்த 16 வருடங்களில் 'சிங்கம்', 'பருத்தி வீரன்', 'சிறுத்தை', 'கொம்பன்', 'நான் மகான் அல்ல', 'மெட்ராஸ்', 'டெடி', சமீபத்தில் வெளியான 'பத்துதல' போன்ற பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்துத் தென்னிந்தியத் திரையுலகில் தயாரிப்பில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. படம் துவங்கியதில் இருந்தே...
ISPL T10 கிரிக்கெட் லீக்: சென்னை அணியின் உரிமத்தை பெற்றார் நடிகர் சூர்யா!

ISPL T10 கிரிக்கெட் லீக்: சென்னை அணியின் உரிமத்தை பெற்றார் நடிகர் சூர்யா!

News
ISPL T10 கிரிக்கெட் லீக்: சென்னை அணியின் உரிமத்தை பெற்றார் நடிகர் சூர்யா! டி10 தொடர் இந்தியாவில் நடத்தப்பட இருக்கிறது. ஐஎஸ்பிஎல் என்கிற பெயரில் நடத்தப்படும் இந்த தொடரில்  சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. மார்ச் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெறும் இந்த ஐஎஸ்பிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் போட்டிபோட்டு வாங்கி வருகின்றனர். அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கினர். இந்நிலையில், சென்னை அணியின் உரிமையை தமிழின் முன்னணி நடிகரான சூர்யா பெற்றுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 10 ஓவர்களை கொண்ட போட்டிகளாக இந்த ஐஎஸ்பிஎல் தொட...
கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்!

கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்!

News
கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டது. உலகதரத்தில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழர்களின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் இந்த அருங்காட்சியகத்தை தமிழ் மொழிக்கு இலக்கிய சேவையை இடையறாது செய்து வரும் நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி சிவக்குமார், நடிகர் சூர்யா, திருமதி ஜோதிகா சூர்யா, அவர்களின் வாரிசுகளான தேவ் மற்றும் தியா ஆகியோர்களும் பார்வையிட்டனர். இவர்களுடன் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரான சு. வெங்கடேசனும் உடனிருந்தார். இறுதியில் அங்குள்ள பதிவேட்டில் ச...
சூர்யாவின் புகழ் கிரீடத்தில் மற்றும் ஓர் ஒளி வீசும் வைரம்!

சூர்யாவின் புகழ் கிரீடத்தில் மற்றும் ஓர் ஒளி வீசும் வைரம்!

News
2022 ஆம் ஆண்டு இப்போதுதான் துவங்கியது, திரைப்பட விருதுகளின்  சீசனும் துவங்கிவிட்டது. திரைத்துறையின் மிக உயரிய ஆஸ்கர் விருது குழு,  இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க விருது கௌரவத்திற்குத் தகுதியான இருநூற்று எழுபத்தாறு திரைப்படங்களின் பெயர்களை இன்று அறிவித்தது. தகுதியான 276 படங்களில், இந்த மதிப்புமிக்க விருதுக்கு போட்டியிட நடிகர் சூர்யா நடித்த “ஜெய்பீம்” திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தகுதி பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு சூர்யாவின் "சூரரைப் போற்று" 93வது அகாடமி விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஜெய்பீம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியான நொடியிலிருந்தே, பழங்குடியினர், அதிகார வர்க்கத்தினரால்  ஒடுக்கப்பட்டதை அருமையாக கையாண்டததற்காக அனைவராலும் பாராட்டப்பட்டது. சமீபத்தில் ஆஸ்கர் ...
70 லட்சம் பகிரப்பட்ட சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டர் (CDP)!

70 லட்சம் பகிரப்பட்ட சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டர் (CDP)!

News
ஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்களுக்கு ஒரு சிறப்பு மிகு நாள்தான். தங்களது அன்பை வெளிபடுத்த ரசிகர்கள் ஏதேனும் புதிதான முயற்சிகளை செய்து அவரது விருப்பமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவர். நடிப்பிலும், அறச்செயலிலும் முதன்மையாக இருந்து வரும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வருகிர 23 ஜூலை அன்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை உலகமுழுவதும் தெரியப்படுத்த அவரது ரசிகர்கள் விரும்பினர். அதற்காக முதன் முறையாக இந்தியாவில் பிரபலங்களாக விளங்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என 115 பிரபலங்களை ரசிகர்கள் தொடர்பு கொண்டு நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை (CDP) அவரவர்களின் சமூக வலைதளத்தில் வெளியிடவைத்து உலகமே அறியும் வகையில் பிரம்மாண்டப் படுத்தியுள்ளனர். ...
சூர்யா ரசிகர்களால் அதிர்ச்சியடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்!

சூர்யா ரசிகர்களால் அதிர்ச்சியடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்!

News
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'காப்பான்' திரைப்படம் நேற்று வெளியானது. பல்வேறு திரையரங்குகளில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டம் புவனகிரியில் நேற்று திரைப்படத்திற்குச் சென்ற கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேண்டு வாத்தியம் முழங்க ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை புவனகிரி காவல் ஆய்வாளர் அம்பேத்கர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, "முன் அனுமதி வாங்காமல் இது போன்று ஊர்வலம் செல்லக் கூடாது, திரையரங்கில் பேனர் வைக்கக் கூடாது என்று அறிவுரை கூறியதோடு, 'இனிமேல் அப்படிச் செய்ய மாட்டோம்' எனக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்' என்று கூறியிருக்கிறார். கடிதம் எழுதிய 6 பேரும் தமிழைத் தப்பும் தவறுமாக எழுதிக் கொடுத்துள்ளனர். அதில் ஒரு மாணவன் 'ஆய்வாளர்' என்பதை 'ஆவ்யாளர்'னு எழுதிருக்கான். "மனச திடப்படுத்திக்கிட்டுத்தான் அதைப் படிச்சேன். படி...