Friday, May 1

Tag: Kanthara chapter 1 review

காந்தாரா சேப்டர் 1 _ விமர்சனம்

Reviews
  காந்தாரா சேப்டர் 1 _ விமர்சனம் இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனப்பகுதியான காந்தாரா,  சிவன் தவம் செய்வதற்காக பார்வதி தேவியால் கொடுக்கப்பட்டது என்று அந்தப் பகுதியில் வசிக்கும் மண்ணின் மைந்தர்களான ஆதிவாசிகள் நம்புகிறார்கள். வீரத்திலும் போர்க்கலையிலும் சிறந்து விளங்கும் இவர்களை அவ்வளவு எளிதில் யாராலும் வென்று விட முடியாது. இந்தக் கூட்டத்தில் ஒருவராக திகழ்கிறார் ரிஷப் ஷெட்டி. காந்தாரா வனப்பகுதியின் அருகிலேயே பாங்காரா என்ற சிறு நாடு இருக்கிறது. இந்த நாட்டின் மன்னராக இருந்து ஜெயராமன் ஆட்சி செய்து வருகிறார். இவரது மகன் குல்சன் தேவய்யா, மகள் ருக்மணி வசந்த். இளவரசராக இருக்கும் மகன் குல்சன் தேவய்யாவுக்கு மகுடம் சூட்டி மன்னர் ஆக்குகிறார் ஜெயராமன். எப்போது பார்த்தாலும் சோம பானம் அருந்தியபடி போதையில் பெண்களுடன் கூத்தடித்து வரும் தேவய்யாவுக்கு ஈசனின் தோட்டமான காந்தாராவை கை...