Tag: Sam CS
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’!
புதிய பரிமாண கதைகளும், வேறு வேறு வகையான படங்களுக்கான மிக உற்சாகமான தேடல் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிகிறது. பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் 'கண்ணே கலைமானே' படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே மிக அதிகமாக உள்ள நிலையில், அவரது புதிய படமான 'கண்ணை நம்பாதே' பிப்ரவரி 4ஆம் தேதி அன்று சம்பிரதாய எளிய சடங்குகளுடன் துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமான இந்த படத்தை "இரவுக்கு ஆயிரம் கண்கள்" படத்தை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார். V.N. ரஞ்சித் குமார் படத்தை தயாரிக்கிறார்.
இயக்குனர் மு.மாறன் சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் தனது முதல் படமான "இரவுக்கு ஆயிரம் கண்கள்" படத்திலேயே தனது திறமைகளை காட்டியிருந்தார். தற்போது அதே வகையில், இந்த படத்தில் தற்போது கிரைம் விஷயங்களையும் சேர்த்திருக்கிறார். "என் முதல் படமான "இரவுக்கு ஆயிரம் கண்கள்" ஆரம்பித்த போது பார்வையாளர்கள் நல்ல கதைகளை ஆதரிப்பா...
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பாடலில் விஜய் சேதுபதியின் சர்ப்ரைஸ்!
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் எல்லா இடங்களிலும் இசை வசந்தத்தை பரப்பி வருகிறது. முதல் சிங்கிள் பாடலான 'கண்ணம்மா' 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. தற்போது, சாம் சிஎஸ்ஸின் வழக்கத்திற்கு மாறான அடுத்த பாடலை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது.
அந்த பாடலை பற்றி இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது, "கதை எழுத ஆரம்பித்த போதே பாடல்கள் கதையின் தீவிரத்தை அதிகரிக்கும் முக்கிய காரணியாக இருக்க வேண்டும், படத்துக்கு வேகத்தடையாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். குறிப்பாக, இந்த பாடல் 'ஏய் கடவுளே' படத்தில் முக்கியமான இடத்தில் வரும். குறிப்பாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் குரலில் வசனமாக ஆரம்பிக்க, ஹரீஷ் கல்யாண் அதை தொடர்ந்து இந்த பாடலை பாடியுள்ளார். இசையின் காதலர்கள் எப்போதும் இசை மற்றும் ஒலியில் வரும் புதிய யோசனைகளை சிவப்பு கம்பளம் வி...
