வா வாத்தியார் _ விமர்சனம்
எம்ஜிஆரின் மிகத் தீவிர ரசிகரான ராஜ்கிரண், எம்ஜிஆர் இறந்த தினத்தன்று அதே நேரத்தில் பிறந்த பிறந்த தனது பேரன் கார்த்தியை வாத்தியாரின் அம்சமாகவே கருதி வளர்த்து வருகிறார்.
உழைக்காத பணத்தின் மீது ஆசைப்படக்கூடாது என்று சொல்லி கார்த்தி வாங்கிய லாட்டரிக்கு கிடைத்த பரிசை ஏற்க மறுத்து கிழித்து எறிந்து விடுகிறார் ராஜ்கிரண்.
இதனால் கோபமடையும் கார்த்தி எம்ஜிஆர் ஆவதற்குக்கு பதில் நம்பியாரைப்போல் ஆகி விடுகிறார்.
போலீஸ் வேலையில் சேர்ந்து மக்களுக்கு தொண்டு செய்து உதவ வேண்டும் என்று தாத்தா ராஜ்கிரண் சொன்னபடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகும் கார்த்தி ஊழல் செய்ய ஆரம்பித்து விடுகிறார்.
இதனால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு அது செய்தித்தாளிலும் வருகிறது. அரசியல் புரோக்கரான சத்தியராஜின் மகளுக்கு விபத்து ஒன்றிலிருந்து தப்பிக்க உதவி செய்து அவர் மூலம் தனது சஸ்பென்ஷன் உத்தரவையும் ரத்து செய்ய வைக்கிறார் கார்த்தி.
கார...
