L S S விமர்சனம்
L S S விமர்சனம்
கல்லூரியில் பயிலும் ஆதவ் கிருஷ்ணா மிகவும் புத்திசாலி மாணவர்.
எந்த அளவுக்கு புத்திசாலி என்றால் தன்னுடன் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்தி, விளக்கமாக புரியும்படி சொல்லித் தரும் அளவுக்கு புத்திசாலி.
மாணவி சிம்ரன் அத்வானியும் ஆதவ் கிருஷ்ணாவும் காதலிக்கின்றனர்.
மிகப்பெரும் செல்வந்தர் வீட்டு பெண்ணான சிம்ரனின் தாயார், தன் கணவரை விட்டுப் பிரிந்து காசியில் வசித்து வருகிறார்.
தன் காதலைப் பற்றி தாயாரிடம் சொல்லி அவருடைய ஆசீர்வாதத்தை வாங்க வேண்டும் என்பதற்காக ஆதவ் கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு காசிக்கு செல்கிறார் சிம்ரன்.
அங்கு எதிர்பாராமல் ஒரு விபத்தில் சிக்கியதால் மூளைச் சாவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
தன் மகளை ஆதவ்கிருஷ்ணா கடத்திச் சென்று விட்டார் என்று சிம்ரனின் தந்தை போலீசில் புகார் செய்கிறார்.
ஆதவ் கிர...
