Friday, May 1

Tag: Thalapathy Vijay

நவம்பர் 21 அன்று மீண்டும் திரைக்கு வரும் ‘ப்ரண்ட்ஸ்’!

நவம்பர் 21 அன்று மீண்டும் திரைக்கு வரும் ‘ப்ரண்ட்ஸ்’!

News
தளபதி விஜய்-சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் நவம்பர் 21 அன்று அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகிறது! தளபதி விஜய் நடித்த 'கில்லி', 'சச்சின்', 'குஷி' உள்ளிட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் விஜய்யும் சூர்யாவும் இணைந்து நடித்த 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது. 'மிருகா', 'மாயப்புத்தகம்', ஜீவா, மிர்ச்சி சிவா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள 'கோல்மால்' உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளரும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் எண்ணற்ற படங்களை விநியோகம் செய்தவருமான பி. வினோத் ஜெயின், ஜாகுவார் ஸ்டுடியோஸ் சார்பில் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தை அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நவம்பர் 21ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறார். இது குறித்து பேசிய அவர், "கடந்த 2001ம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு வெளியான ...
ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2021ல் தளபதி விஜய்க்கு சிறந்த நடிகர் விருது

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2021ல் தளபதி விஜய்க்கு சிறந்த நடிகர் விருது

News
ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2021ல்  மூன்று விருதுகளை வென்ற மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் ஜப்பானில் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட திருவிழா 2021 நடைபெற்றது. இந்த சர்வதேச திரைப்பட திருவிழா அந்த வருடத்தின் சிறந்த படங்களை வகைப்படுத்தி தேர்வு செய்தது. மாஸ்டர் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான விருது தளபதி விஜய்க்கு வழங்கப்பட்டது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படம்  2021 பொங்கல் பண்டிகையினல் வெளியானது. இந்த படத்தில் மேலும் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா ஜெரமையா மற்றும் கவுரி ஜி கிஷன் ஆகியோரும் நடித்திருந்தனர். மாஸ்டர் திரைப்படம் ஒன்றல்ல, மூன்று விருதுகளை வென்றுள்ளது. வாத்தி கம்மிங் பாடலுக்கு சிறந்த நடன வடிவமைப்புக்கான விருதை ...
மகேஷ் பாபு சவாலை ஏற்று மரக் கன்று நட்ட விஜய்!

மகேஷ் பாபு சவாலை ஏற்று மரக் கன்று நட்ட விஜய்!

News
பிரபலமான ஒரு நபர் கடினமான ஒரு காரியத்தைச் செய்துவிட்டு, அதைப்போல் வேறு சிலரை செய்யத் தூண்டி சவால் விடுவது சமீபகாலமாக பிரபலமடைந்து வருகிறது. ஐஸ் போன்ற குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக் கொள்ளும் அபத்தமான சவாலில் ஆரம்பித்து, தலையணையை ஆடையாக்கி உடலை மறைத்துக் கொள்ளும் அசிங்கமான சவால்கள்வரை ஏராளமான சவால்களை ரசிகர்கள் பார்த்துவிட்டார்கள். பொது நல நோக்கிலும், பலருக்கும் பயன்படும் விதத்திலுமான மிகச் சில சவால்களை அவ்வப்போது பலரும் முன்னெடுப்பதுண்டு. அப்படிப்பட்ட சவால்களில் ஒன்றுதான் மரக் கன்று நடுவது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு மரக் கன்றுகளை நட்டதுடன் அதைப் படம் பிடித்துப்போட்டு, நடிகர் விஜய்க்கு சவால் விடுத்திருந்தார். அதை ஏற்று விஜய் இப்போது மரக் கன்றுகளை நட்டிருக்கிறார். விஜய் நட்ட மரக்கன்று என்பதால் கண்டிப்பாக நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு, மரமாக உயர்ந்து வளரும் என நம்பலாம்.  ...