![]()
குரங்கணி மலையின் அடிவாரம் பகுதியில் வசிப்பவர்களுக்கும், மலையின் அடர்ந்த வனப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் தீராப் பகை காலம் காலமாக இருந்து வருகிறது.
குரங்கணி யாளீஸ்வரர் திருவிழாவை சிறப்பாக கொண்டாட ஊர் மக்கள் முடிவு செய்கின்றனர்.
ஊர்த் தலைவர் விமல் அவரது மனைவி சிருஷ்டி டாங்கே விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க, யாழி சிலையை கடத்த வில்லன் கபி துஹான் சிங் முயற்சிக்கிறார்.
அவருக்கு துணையாக வன அதிகாரி ஜான் விஜய் சதி வேலைகளில் ஈடுபடுகிறார்.
கடத்தல் கும்பலின் கைக்கு யாழி சிலை சென்றதா?
ஊர் திருவிழா சிறப்பாக நடந்ததா? என்பதை சொல்லும் படம்தான் மகாசேனா.
நல்லதொரு கதை கருவாக அமைந்தும் அதை சுமாரான திரைக்கதையால் சாதாரண படமாக்கி விட்டார் இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன். படத்தின் கதை வசனத்தை எழுதி இருப்பவரும் இவரே.
படத்தில் பாராட்டத்தக்க அம்சம் டி.ஆர். மனஸ் பாபுவின் ஒளிப்பதிவுதான். மலை மற்றும் மலை சார்ந்த பகுதிகளை மிக அழகாக படமாக்கிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
பிரவீன் குமார் இசையமைப்பில் உருவான பாடல்கள் மற்றும் உதய் பிரகாஷ் பின்னணி இசை இரண்டுமே சுமார் ரகம்தான்.
யோகி பாபு வேடத்தை வலிய திணித்து வீணாக்கிய படங்களில் மகா சேனாவையும் சேர்த்துக் கொள்ளலாம்.

